நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500 கரும்புக்கு டன்னுக்கு ரூ 4000 தருவதாக கூறி மூன்று ஆண்டுகள் நிறைவான நிலையில் இதுவரையிலும் அந்த தொகையை வழங்கவில்லை இதனை தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மன்னாா்குடியில் காவிரி தனபால் பேட்டி

நெல் குவிண்டால் ஒன்றுக்கு  ரூ  2500  கரும்புக்கு டன்னுக்கு  ரூ 4000 தருவதாக கூறி மூன்று ஆண்டுகள் நிறைவான நிலையில் இதுவரையிலும் அந்த தொகையை வழங்கவில்லை இதனை தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மன்னாா்குடியில்  காவிரி தனபால் பேட்டி 

தேசிய உழவர் தினத்தை முன்னிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் , தமிழ்நாடு க விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்  சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் கோவிந்தசாமி , விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் துணை தலைவர்  கக்கரை சுகுமார் , காவிரி விவசாய சங்க தலைவர் காவிரி தனபால் உள்ளிட்ட விவசாயிகள் மாநில, நிர்வாகிகள் , பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தி அதை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் , பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் , காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகத் தொடங்கியுள்ளது இதற்கு தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீட்டு தொகை ரூ  35 ஆயிரம்  நிவாரண வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவிரி காவிரி தனபால் கூறுகையில் தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ  2500  கரும்புக்கு டன்னுக்கு  ரூ 4000 தருவதாக கூறி மூன்று ஆண்டுகள் நிறைவான நிலையில் இதுவரையிலும் அந்த தொகையை வழங்கப்படவில்லை இதனை தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் பயிர் காப்பீடு திட்டம்  என்பது தனியார் நிறுவனத்தை நோக்கி சென்றுள்ளது   டெல்டா மாவட்டத்தில் ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர்  திறக்கும் போது அரசாணை வெளியிட்ட அடிப்படையில் பாசன உறுதி செய்யப்பட்ட  பகுதிகளுக்கு அந்த நாட்கள் முழுவதும் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது அரசினுடைய சட்டம் போதிய தண்ணீர் கொடுக்க முடியாத நிலையில் இன்று 70 நாட்களாக மேட்டூர் அணை மூடப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த டெல்டாவின்  சாகுபடி பாசனம் உறுதி செய்யப்பட்ட பகுதிகளை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் ஒட்டு மொத்த விளைநிலங்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் ஒட்டுமொத்த விவசாயிகளுடைய நலன் கருதி கடன் வழங்கும்  அளவை உயர்த்தி வழங்க வேண்டும்  தொடர்ந்து கர்நாடக அரசு தண்ணீர் தராத சூழ்நிலையில் காவிரியின் உடைய வழக்கு நீர்த்துப் போன நிலையிலும் பல் இல்லாத ஆணையமாக இருக்ககூடிய காலக்கட்டத்தில் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க  வேண்டுமானால்  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தினசரி கிடைக்க கூடிய தண்ணீரை  பங்கிடும் வகையில் வழக்கு தொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Previous Post Next Post