சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து ஆய்வு கூட்டம் !தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்தெய்வீக பக்தர் பேரவை வேண்டுகோள்

சிதம்பரம் 
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து ஆய்வு கூட்டம் !
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்
தெய்வீக பக்தர் பேரவை வேண்டுகோள்

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜன் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெய்வீக பக்தர்கள் பேரவை
 நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  கூடுதல் தலைமைச் செயலாளர்  சுற்றுலா பண்பாட்டு இந்து கோவில்கள் கடலூர்மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த நிலையில் சிதம்பரம்  ஆனந்தீஸ்வரன் கோவில் அலுவலகத்தில் நேற்று தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து இரண்டாவது முறையாக ஆய்வு கூட்டம் நடந்தது

இந்த கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜெ.பரணிதரன் தலைமை தாங்கினார்.
தெய்வீக பத்திரப்பதிவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா தில்லை கோவிந்தராஜ பெருமாள் டிரஸ்ட்டி திருவேங்கடம் சுதர்சனம். செயல் அலுவலர் ராஜ்குமார்  இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் நர்சிங்க பெருமாள்  உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் டிரஸ்ட் திருவேங்கடம் சுதர்சனம் ஆகியோர் கூறுகையில் இக்கோவிலில் பல ஆண்டுகாலம் பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் இருப்பது உண்மைதான் ஆனால் இந்த வருடம் பிரம்மோற்சவம்  நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து நடத்துவோம் என்றார்
தொடர்ந்து
தெய்வீக பக்தர்பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா கூறுகையில்

இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவே
தமிழகத்தில் 1000 கோவிலுக்கு மேல் குடமுழுக்கு நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு மற்றும் இந்து சமய அறநிலைய ஆணையர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் 
சுமார் 400 ஆண்டு காலம் நடைபெறாமல் உள்ள
 தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 1500 ஆண்டு காலம் ஆகியும் இன்னும் சைவ , வைணவ பாகுபாடு உள்ளது என்கின்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் உள்ளது.
 தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் பிரமோற்சவம் நடத்துவதற்கு  சைவ, வைணவ பாகுபாடு இன்றி சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள்
என்றார்.

இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜெ. பரணிதரன் கூறுகையில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Previous Post Next Post