தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தை அண்மையில் தொடங்கியது. அதை சிறப்பாக செயல்படுத்த பள்ளி அளவில் பல்வேறு மாணவர் குழுக்களை அமைக்க கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் இன்று காய்கறி தோட்டத்தை ஏற்படுத்தினர்.

காய்கறி தோட்டம் அமைத்த அரசு பள்ளி மாணவர்கள்
 தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தை அண்மையில்  தொடங்கியது.  அதை சிறப்பாக செயல்படுத்த பள்ளி அளவில் பல்வேறு  மாணவர் குழுக்களை அமைக்க  கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.  இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம்,  பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  மாணவர்கள் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் இன்று காய்கறி தோட்டத்தை ஏற்படுத்தினர். இத்தோட்டப்பயிர்களுக்கு முற்றிலும் இயற்கை உரங்கள்  மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பற்றியும் சுற்றுச்சூழல்  மன்ற ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் முரளி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இதில் விளையும் காய்கறிகள் சத்துணவுக்கு பயன்படுத்தலாம் என இத்திட்டம்  தொடர்பான விழிப்புணர்வை  மாணவர்களுக்கு  எடுத்துரைத்தார்.  இப்பள்ளியில் ஏற்கனவே சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக மரங்கள் நட்டு  பாதுகாத்து வருகின்றனர் மேலும் இப்பள்ளி வளாகத்தில் பூந்தோட்டம்,  மூலிகை தோட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தி மாணவர்கள் பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.  இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஜெகராஜ், விமலி, ரூபிணி  ஆகியோர் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
Previous Post Next Post