மன்னார்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை திருத்தம் செய்ய சிறப்பு முகாம் முன்னாள் அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு புதிய வாக்களர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் .

மன்னார்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை திருத்தம் செய்ய சிறப்பு முகாம் முன்னாள் அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு புதிய வாக்களர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் . 

தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். தற்போது காலாண்டுக்கு ஒருமுறை பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வழக்கமான திருத்தப் பணிகள் அன்றே தொடங்கின. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 2024 ஜன.1-ம் தேதி 18 வயது முடியும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பலரும் ஆன்லைன் மற்றும் நேரில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், நவ.4, 5 (இன்று, நாளை) ஆகிய 2 நாட்களும் தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அங்கு வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை, பெயர் நீக்கப்பட்டிருந்தால், சேர்ப்பதற்கு விண்ணப்பம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ருக்மணிபாளையத்தில் உள்ள நகராட்சி பெண்ட்லெண்ட் மாடல் தொடக்கபள்ளியில் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ் புதிய வாக்காளர் விண்ணப்படிவத்தினை பார்வையிட்டு புதிய வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் . இதில் அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் . 
Previous Post Next Post