வலங்கைமான் அருகே பட்டா கத்தி மற்றும் வெடிப்பொருட்களுடன் சுற்றி திரிந்த பிரபல ரவுடி கைது
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர் . இந்நிலையில் திருவாருர் மாவட்டம், வலங்கைமான் காவல் சரகத்தை சேர்ந்த அணியமங்கலம் சேர்ந்த முத்து வெங்கடாசலம் என்பர் மகன் பிரபல ரவுடி குபேரன் 2 கொலை வழக்குகள், அடிதடி மற்றும் பிற வழக்குகள் உள்ளிட்ட 9 வழக்குகளில் ஈடுபட்டு வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் பிரபல ரவுடி குபேரன் 2 தொடர் குற்றச் செயல்களிகளில் ஈடுபடுவதாக கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் மேற்கண்ட ரவுடியின் நடவடிக்கைகளை வலங்கைமான் காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் பிரபல ரவுடி குபேரன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை உறுதி செய்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவின் அடிப்படையில் கோபிநாத், உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் பிரபல ரவுடியை வலங்கைமான் பகுதியில் நின்று கொண்டிருந்த போது கைது செய்தனர். பிரபல ரவுடி குபேரனிடமிருந்து சட்டவிரோதமாக அனுமதியோ அல்லது உரிமமோ இன்றி DBBL துப்பாக்கி தோட்டாக்கள்-18 மற்றும் 1 ½ அடி நீளமுள்ள கத்தியும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரபல ரவுடி குபேரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.