மன்னார்குடி அருகே மக்கள் நேர்காணல் முகாமில் 214 பயனாளிகளுக்கு ரூ.47 இலட்சத்து 82 ஆயிரத்து 80 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஆதிச்சபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 214 பயனாளிகளுக்கு ரூ.47 இலட்சத்து 82 ஆயிரத்து 80 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் கோ.பாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 88 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி 10ஆயிரம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. என மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
மேலும், இன்றைய தினம், நடைபெறும் மக்கள் நேர்காணல் முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 75 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவிதொகைக்கான ஆணையினையும், 33 நபர்களுக்கு உறுப்பினர் சார்ந்தோர் திருமண உதவிதொகைக்கான ஆணையினையும், 88 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கான ஆணையினையும், 02 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு விதைகள் மற்றும் ஸ்பேயர்களையும், 1 பயனாளிகளுக்கு ரூ.12.19 இலட்சம் மதிப்பிலான நெல் நடவு இயந்திரமும், மரக்கன்றுகளும் வழங்கினார்கள்.