மன்னார்குடியில் தடை செய்யபட்ட பான் குட்க விற்ற திமுக நிர்வாகி உட்பட இருவர் கைது ரூ 4 லட்சம் மற்றும் ரூ 1.லட்சத்தி 37 ஆயிரம் மதிப்பிலான பான் , குட்கா பறிமுதல் .
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டு வந்த மன்னார்குடி தெப்பகுளம் பகுதியை சேர்ந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் சங்கர் என்கிற சிவசங்கர் ( 40 ) தஞ்சை மாவட்டம் ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் ( 40 ) ஆகிய இருவரையும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கிய ராஜ் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 16 சாக்கு மூட்டை களிலிருந்து ரூ. 1 லட்சத்து 37, ஆயிரம் மதிப்புள்ள 140 கிலோ குட்கா மற்றும் குட்கா விற்பனை செய்த தொகை ரூ 4 லட்சம் மேலும் விற்பனைக்கு பயன்படுத்தபட்ட இரண்டு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர் .
கைது செய்யபட்ட திமுக நிர்வாகி சிவசங்கர் படம் மட்டும் உள்ளது.