அகரம் கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பாட்டை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்

அகரம் கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பாட்டை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு  உள்பட்ட   அகரம் கிராமத்தில்  ஊர் பொதுமக்கள் சார்பாக பாட்டை புறம்போக்கு இடத்தை கிராம மக்கள் ஆண்டு ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த 
 பாரம்பரியம் மற்றும் பொதுவழியை மற்றும் கிராம மக்கள் இந்த இடத்தில் தான் காரியம் மற்றும் பொது நிகழ்ச்சிகள்  செய்கின்றனர் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா. சு.தண்டபாணி  மற்றும் அவருக்கு உடைந்தையாக செயல்பட்டு வரும் போச்சம்பள்ளி அறநிலையத்துறை ஆய்வாளர் அ.சத்யா அவர்களை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள் ஆண்கள் என 100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பாட்டை புறம்போக்கு ஆற்றங்கரை அரசமரத்தின் கீழ் உண்ணாவிரதப் போராட்டம் காலை 10 மணி முதல் நடைபெற்றது இந்த நிலையில் அங்கு விரிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார்.திருமுருகன் மற்றும் பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற 8.ஆம் தேதி பீஸ் கமிட்டி அமைத்துள்ளது  அங்கு வந்து உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறிய பின்பு உண்ணாவிரதம் செய்த கிராம மக்கள் கலைத்து சென்றனர்
Previous Post Next Post