திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியினை ஒன்றிய மோடி அரசாங்கம் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
100 நாள் வேலை செய்த கூலி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத சம்பள பாக்கியை தீபாவளி பண்டிகைக்கு உதவிடும் வகையில் உடனே வழங்க வேண்டும் , 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியினை ஒன்றிய மோடி அரசாங்கம் உடனே வழங்க வேண்டும் ,இயற்கை பாதிப்பால் வேலையில் இழந்துள்ள விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ 5 ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவி தொகையை வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ 600 ஊதியம் வழங்க வேண்டும் குடியிருக்க இடம் மனை பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கி ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்