கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமாராட்சி வர்த்தக சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் வர்த்தக சங்கத் தலைவரும் ஊராட்சி மன்ற தலைவருமான கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
நெய்வேலியில் 27 வது வட்டம் சூப்பர் பஜாரில் பிரியாணி கடை நடத்தி வந்த கண்ணன் என்பவரை ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் இதை கண்டித்து குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது பிறகு திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தியை ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1. படுகொலை செய்யப்பட்ட வணிகரை கொலை செய்த ரவுடி கும்பலை அனைவரையும் உடனடியாக கைது செய்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்
2. மாவட்டத்திலுள்ள வணிகர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து அச்சத்தை போக்க வேண்டுமாய் மாவட்டக் கண்காணிப்பாளர் அவர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது
3. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் காவல்துறை கடைவீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்
உள்பட பல தீர்மானங்கள் நிறுவப்பட்டன கூட்டத்தில் நிர்வாகிகள் செயலாளர் S.மணிவண்ணன் ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் பொருளாளர் G.ராஜேந்திரன் துணைத் தலைவர் KKS.பார்த்தசாரதி S.துரைசிங்கம் TC.பாண்டியன் S.மணிகண்டன் மாதவசாமி N.பாலமுருகன் N.வீரமணி R.பாலமுருகன் பிரதீப்ஜெயின் ஜானகிராமன் செந்தில் உள்பட வணிக சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்