கலைஞர் மகளிர் உதவி திட்டம் அடிப்படையில் குடும்ப தலைவியின் பெயரில் ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழக முதல்வருக்கு கூத்தாநல்லூரில் நடைபெற்ற இந்திய தேசிய மாதர் சம்மேளனம் 15 வது மாநாட்டில் பாராட்டுகளையும் நன்றி தெரிவித்து தீர்மானம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருவாரூர் மாவட்ட 15 வது மாநாடு கூத்தாநல்லூரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாவட்ட முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில தலைவர் பத்மாவதி , இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணை செயலாளர் கண்ணகி உள்ளிட்ட மாநில , மாவட்ட ஒன்றிய நகர, தலைவர் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் .உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு சட்டம் பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் , கலைஞர் மகளிர் உதவி திட்டம் அடிப்படையில் குடும்ப தலைவியின் பெயரில் ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது . அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில துணை செயலாளர் கண்ணகி கூறுகையில் தொடர்ந்து ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் , சிலிண்டர் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி ஏழை எளிய மக்களை பழிவாங்குகிறது, 2024 தேர்தலை முன்வைத்து பெண்களை ஏமாற்றி வாக்கு வாங்குவதற்காக பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ள பாஜக அரசாங்கம் 6 மாத காலத்தில் இதை நிறைவேற்ற முடியாது என தெரிந்தும் சட்டத்தை நிறைவேற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறார் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்