மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பின்லே மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ , மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் , வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் .
இம்முகாமில், மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும், அடையாள அட்டை பெறாத நபர்களும், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்காகவும் அரசின் திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் அடையாள அட்டை பெற்றவர்களும் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுக்களுக்காக அளித்தும் பயன்பெற்றனர்.
இம்முகாமில், மாற்றத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.34,500 மதிப்பிலான நலவாரிய கல்வி உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் திருமதி.புவனா, வட்டாட்சியர் திரு.கார்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.