கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இனிப்பு வழங்கி அன்னதானம்
சிதம்பரம் . செப்.17-
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சிதம்பரம் சிங்காரத்தோப்பில் அமைந்துள்ள ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கினார்கள் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, கவுன்சிலர் தமிழரசன், மாவட்ட செயலாளர் மணலூர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன், முத்துசாமி, விசிக சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வ.க செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணை தலைவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமாகிய கே ஐ மணிரத்தினம் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முரளி, நீலமேகம், பொன். மாதவ சர்மா கருணாநிதி, ரமேஷ், அம்பேத்கர், மணியரசன், பிரகாசம், நாகராஜன், முருகேசன், விஸ்வலிங்கம், அசோகன், தனபால், கலைமாமணி, சேகர் உள்பட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் வழக்கறிஞர் செல்வகுமார் நன்றி கூறினார்