முதலமைச்சர் மு க ஸ்டாலின் மவுனம் கர்நாடகாவிற்கு சாதகமாகவும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளது பி ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு.

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு. 
இடம்:மாங்குடி- முத்துப்பேட்டை 
நாள்:15.09.2023

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மவுனம் கர்நாடகாவிற்கு சாதகமாகவும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளது 
பி ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு. 
காவிரி டெல்டாவில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் பெருமளவில் விவசாயிகள் கலந்து கொள்ள செல்வதற்கான  தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் முத்துப்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர்  டி.சரவணன் தலைமையில் மாங்குடியில் நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் மாநிலத் துணைச் செயலாளர் 
எம் செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள். முன்னணி விவசாயிகள் பங்கேற்றனர். 
கூட்டத்தில் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது. 

கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து இரண்டு மாத காலமாக அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதற்காக மிகப்பெரிய போர்க்களத்தை கர்நாடகாவில் உருவாக்கி வருகிறார்.சட்டவிரோதமாக இரண்டு முறை அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது.மேகதாது அணை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் ஆகும்.அண்டை மாநில உறவுகளை சீர்குழைக்கும் நடவடிக்கையாகும்.

மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் 
கஜேந்திரசிங் ஷெக்காவத்திடம் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி கே சிவக்குமாரை அனுப்பி வைத்து  ஆணையம் உத்தரவிட்டால் அதனை மத்திய அரசு ஏற்று தமிழகத்திற்கு தண்ணீர் விடுவிக்க  உத்தரவிடக்கூடாது என கடிதம் மூலம் வலியுறுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்தாமல்.கர்நாடக அரசின் விமர்சனத்திற்கு உரிய பதில் அளிக்காமல்,மத்திய அரசிடம் தவறான கருத்தை முன்மொழிந்த கர்நாடக முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காமல் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மவுனம் காப்பது கர்நாடகாவிற்கு சாதகமாகவும்,தமிழக விவசாயிகளுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளது. 
இதனால் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கிறேன். 

காவிரி நீர் கோரி மத்திய அரசுக்கு எதிராக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி டெல்டா ரயில் மறியல் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளார்கள் என்றார். 

முன்னதாக போராட்டம் குறித்த பிரசுரங்களை நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கினார்.
Previous Post Next Post