திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை இயற்கை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறந்திட வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடரும் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் இயற்கை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் இயங்கி வந்தது. இதில் மின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு இப்பகுதி முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்ட இந்நிலையில் திருமக்கோட்டை இயற்கை எரிவாயு சுழலின் மின் உற்பத்தி நிலையத்தை சென்னைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்திட வேண்டும், மூன்று ஆண்டுகள் உற்பத்தி செய்வதற்கான நிலவாயு வாய்ப்புகள் இருந்தும், திட்டமிட்டு அதனை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து திருமக்கோட்டை மின்உற்பத்தி நிலையும் தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை மூடப்படுமேயானால் மிகப்பெரிய அளவில் மின் தட்டுப்பாடு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் என்பதை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த பத்து வருடங்களாக இங்கே வேலை பார்த்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோய் உள்ளது, அதனை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.