திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மாத தவணையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ஊழல் ஒரே நிலத்தை பலபேருக்கு விற்றதால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமோகனை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமோகன் என்பவர் தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுலப தவணைத் திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக கூறி நில மோசடியில் ஈடுபட்டு வந்தவர், அந்த வகையில் மன்னார்குடி அருகே மாத தவணையில் வீட்டுமனை விற்பனையில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே 32 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தினை கிருஷ்ணா நகர், குபேர நகர் என்ற பெயரில் வீட்டுமனைகளாக மாற்றி தருவதாக கூறி 307 நபர்களுகளிடம் மாதா மாதம் ரூ.1000 என்ற மாத தவணை திட்டத்தின் அடிப்படையில் நீதிமோகன் என்பவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விளைநிலங்களை வீட்டு மனை பட்டா மாற்றமுடியாததால் , திட்டத்தில் பணம் முழுவதும் கட்டிய ஏழை மக்களுக்கு வீட்டு மனையினை நீதிமோகன் வழங்கவில்லை. இந்நிலையில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய 32 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் 307 நபர்களின் சார்பில் தனிநபர் ஒருவர் தற்போது விவசாய பணிகளை மேற்கொண்டு அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு பணம் கட்டி வீட்டு மனை பெறமுடியாத ஏழை மக்களுக்கு பிரித்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நீதிமோகன் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய 32 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தினை வேறுவொரு தனிநபருக்கு விற்பனை செய்வதாக கூறி அதற்குண்டான ரூ.75 லட்ச ரூபாயினை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இத்தகைய சூழலில் நீதிமோகனிடம் மொத்தமாக 32 ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டதாக கூறி முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள் . இதனை அறிந்த ஏற்கனவே நீதிமோகனிடம் மாத தவணையில் வீட்டு மனைகளை வாங்கிய 307 நபர்களும், வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டவரிடம் ஏற்கனவே நாங்கள் இந்த இடத்தை வாங்கியுள்ளதாக தங்களிடம் உள்ள ஆவணங்களை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தங்களுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கரமிக்காதே என ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் நீதிமோகன் என்பவர் ரியல்எஸ்டேட் தொழிலில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தவர். சுலப தவணையில் வீட்டுமனை வழங்குவதாக அப்பாவி பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி நீதிமோகன் ஒரே இடத்தை பல பேருக்கு விற்பனை செய்து சுமார் ரூ.25 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நில மோசடியில் ஈடுபட்டு ஏழை மக்களுக்கு தருவதாக கூறி அப்பாவி மக்களை வஞ்சிக்கும் நீதிமோகன் மீது தமிழக அரசு, காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மனைகளை பெற்று தர வேண்டும் என தெரிவித்தனர்.
பேட்டி
1, பாலகிருஷ்ணன் பாதிக்கபட்டவர்
2, தங்க தமிழ்வேலன் சமுக ஆர்வலர்
3, லதா பாதிக்கப்பட்டவர்