தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் 25 கோரிக்கைகளை முன்வைத்து துவங்கியுள்ளது. முன்னதாக தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து தேசிய கீதங்கள் இயக்கப்பட்டது. காந்திய வழியில் ராட்டையை இயக்கி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு 
இடம்:சென்னை 
நாள்:15.08.2023 

நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் காலணியாதிக்க ஆட்சியா? 
பிஆர் பாண்டியன் கேள்வி 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் 25 கோரிக்கைகளை முன்வைத்து துவங்கியுள்ளது. முன்னதாக தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து தேசிய கீதங்கள் இயக்கப்பட்டது. காந்திய வழியில் ராட்டையை இயக்கி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

போராட்டத்திற்கு 
பி ஆர் பாண்டியன் தலைமையேற்று பேசியதாவது: 

தமிழ்நாட்டில் நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இறுதி நாளில் விவாதமின்றி கூட்டணி கட்சிகளுக்கு தெரியப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு மறைமுகமாக நிறைவேற்றி உள்ளது 

இச்சட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதோடு,ஏரி,குளம்.குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்களையும் நீர் வழி பாதைகளான ஆறுகள் கால்வாய்களையும் அபகரித்துக் கொள்ள வழிவகை செய்கிறது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயிகள் சுதந்திரம் பறிபோகிறது. அகதிகளாக வெளியேறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும்.

இச்சட்டம் மூலம் திமுக அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் மீண்டும் காலணியாதிக்க ஆட்சிக்கு வழிவகுக்கிறார்.

லூலு மார்ட் போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதால் உள்நாட்டு வணிகர்கள் அடியோடு அழிய போகிறது. 

நெல்லுக்கு ரூபாய் 3000ம்,கரும்பு டன் 1 க்கு 4500ம்வழங்கிட வேண்டும்.ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்த அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும்  நிறைவேற்றவில்லை. கலைஞர் பேரில் கொண்டு வந்த கிராமப்புற  விவசாயிகள் வேளாண் வளர்ச்சி திட்டம் கூட இந்த ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவது வண்மையாக . 

தமிழ்நாட்டில் காவிரி, முல்லைப் பெரியாறு வைகை. பாசனப்பகுதிகள் வறண்டு கிடக்கிறது. குமரி முதல் சென்னை வரையிலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பாதிப்பால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்படப்போகிறது. காலத்தில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்டி ஜூலை மாதத்திலேயே மழை பெய்கிற போது கர்நாடக தண்ணீரை பெற வேண்டும் என்று தொடர்ந்து மன்றாடினோம், ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுத்து பிரதமரை சந்திப்பதும், அமைச்சருக்கு கடிதம் கொடுப்பதுமான வேலையாக காலம் கடத்தியது. 
காலம் கடந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. எனவே காவிரி டெல்டா பேரழிவிற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். இனி கர்நாடகாவில் பெரும் தண்ணீரை வைத்து குறுவையை காப்பாற்ற முடியாது. 

12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பேற்க முதலமைச்சர் முன்வர வேண்டும். 

தமிழ்நாடு பொறுப்பேற்று தமிழ்நாட்டிற்கென தனி காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதோடு,வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழக்கு முன் வர வேண்டும் உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய வழியில் அகிம்சை வழி போராட்டமான சத்தியாகிரக போராட்டத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். 

தமிழ்நாடு முழுமையிலும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. முதலமைச்சர் இதே நிலை தொடர்ந்தால் ஒத்த கருத்துடைய கட்சிகள்,அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிர படுத்த நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றார்.

போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன்அன்சாரி பேசியதாவது:

இந்தியாவில் மதவாத சக்திகள் விவசாயிகளை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது. ஹரியானாவில் விவசாயின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை மதவெறி தாக்குதலாக சித்தரிக்க முயற்சி வடமாநில விவசாயிகள் முறியடித்துள்ளனர். 

மணிப்பூரில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் மோதல் தீவிரமடைந்தது. இவற்றிலும் ஜாதிய ரீதியான பிரச்சனையாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. உண்மை அதுவல்ல.
பெட்ரோலுக்கு மாற்றான தொழில்நுட்பம் கொண்ட கனிம வளங்கள் அங்கு இருப்பதாக அறிந்து அதனை அதானிக்கு தாரைவார்ப்பதற்காக முன்கூட்டியே மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியாக மணிப்பூரில் போராட்டத்தை மத்திய அரசு தூண்ட வருவது வேதனை அளிக்கிறது. 

இந்நிலையில் இப் போராட்டம் தமிழ்நாட்டில் துவங்கி உள்ளதை தமிழக முதலமைச்சர் உடன் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023யை திரும்ப பெற  வேண்டும் என வலியுறுத்துகிறேன்.மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து விவசாயத்துக்கு போராட்டத்திற்கு துணை நிற்கும் என்றார்.

மாநில பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி,அமைப்பு செயலாளர் எஸ்ஸ்ரீதர்.தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் 
எல். பழனியப்பன், மாநில கவுரவ தலைவர் மதுரை 
எம் பி ராமன், சென்னை மண்டல தலைவர் சைதை சிவா, செயலாளர் திருவள்ளூர் வெங்கடாத்ரி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் தமிழகம் முழுமையிலிருந்தும் பங்கேற்று உள்ளனர்.

இவன் 
என்.மணிமாறன் செய்தி தொடர்பாளர்
Previous Post Next Post