டாஸ்மாக் மது பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக் பயன்படுத்தும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் - -பாட்டில் வியாபாரிகள் நல சங்கம் கோரிக்கை

டாஸ்மாக் மது பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக் பயன்படுத்தும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் - -பாட்டில் வியாபாரிகள் நல சங்கம் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம்   மன்னார்குடியில் பாட்டில் வியாபாரிகள் நல சங்க மாநில செய்தி தொடர்பாளர்  ஆர்.வி.ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது தமிழக  அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக்-ஐ பயன்படுத்த உள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதில் உள்ள பாதக அம்சங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் டெட்ரா  பேக் ஆனது முழுமையாக மக்காது அதனால் அது சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும். நீர்நிலைகள், கழிவுநீர் வாய்க்கால், வடிகால் ஆகியவற்றில் இவைகள் கலந்து நீர்நிலைகளை மாசுபட செய்யும். அதேபோல் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதை உண்ணும் அபாயம் உள்ளது. டெட்ரா பேக் ஆனது ஐந்து முதல் ஆறு அடுக்குகள் அதாவது அலுமினியம், பாலித்தீன் , பேப்பர் பாலித்தீன்,  என்று அடுக்கடுக்காக கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் மக்காத ரகத்தை சேர்ந்தவை என்பதை உணர வேண்டும். இந்தியாவில் சுமார் 11 மாநிலங்களில்  அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது கர்நாடகத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கைவிடப்பட்டு விட்டது. கர்நாடகத்திலும் டெட்ரா பேக்கை கைவிட கோரிக்கை எழுந்து வருகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம் டெட்ரா பேக் கால் மிகவும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் டெட்ரா பேக் அறிமுகம் செய்வது என்பது நமது மண்ணுக்கும், சுற்று சூழக்கும், எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் தீங்காகும். மேலும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு வரை கண்ணாடி பாட்டில் ஒரே வடிவமாக அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தின. இதனால் மீண்டும் பாட்டில்களை கழுவி சுத்தம் செய்து எந்த நிறுவனங்கள் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு என பிரத்தியேக வடிவத்தை வைத்திருப்பதால் மீண்டும் அவர்களிடம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் 14 ஆண்டுகளுக்கு முன்பு  பயன்படுத்தப்பட்ட பாட்டில் இரண்டு ரூபாய்க்கு வாங்கிய நிலை மாறி  இன்று 50 பைசா என்ற அளவில் இருக்கிறது. இதனால் மறுசுழற்சிக்கு பாட்டில்களை சேகரிப்போர், விற்போர் என அனைவரும் மிகுந்த இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சேகரித்து  கழுவி மீண்டும் விற்பனை செய்யும் தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும்  5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 400 பாட்டில்களை கழுவி விற்கும் நிறுவனத்தினர் இயங்கி வருகின்றனர். பாட்டில்களை சேகரிக்கும் துப்புரவாளர்கள். சைக்கிள் மற்றும் வாகனங்களில் பாட்டில்களை வாங்குபவர்கள். அதனை வாங்கும் பழைய கடைக்காரர்கள், கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கும் பாட்டில் கழுவும் நிறுவனத்தினர் என இந்த சங்கிலியில் பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். டெட்ரா பேக் என்ற இந்த முடிவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உள்ளது. ஒரு மதத்திற்கு 24 கோடி பாட்டில் உற்பத்தி ஆகிறது இந்த 24 கோடி பாட்டிலும் டெட்ரா பேக் மூலம் வந்தால் தமிழக அரசு மாபெரும் சுற்று சூழல் மாசுபடுவதை சந்திக்க வேண்டி வரும். ஆகவே தமிழக அரசு அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்ந்து பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்தால் பாட்டில்கள் எங்கும் வீசப்படாது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பது நிச்சயம். பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினால் தான் அதை சேகரிப்பவர்களும் அதை விற்பனைக்கு கொண்டு வருபவர்களும் அதை  சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில்லை. ஆதலால் பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்களுக்கு அரசு உரிய விலையை நிர்ணயித்து அதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் வாழ்வு தர வேண்டும் என தெரிவித்தார். 
Previous Post Next Post