செய்திக் குறிப்பு
நாள் 08.07.2023
இடம்:சென்னை
பிஆர் பாண்டியனுக்கு விபத்து இழப்பீடாக 2.50 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்னை லோக் அதாலத் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியன் கடந்த 16ம் ஆண்டு காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் கூட்டி இருந்தார். அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மன்னார்குடியில் இருந்து சென்னை நோக்கி பொலிரோ காரில் பயணம் செய்தார்
திண்டிவனம் அருகே பாண்டிச்சேரி சாலையை கடந்து சென்ற போது கர்நாடகாவை சேர்ந்த ராட்சத லாரி ஒன்று குறுக்கே நுழைந்து பிஆர்.பாண்டியன் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது .
காவிரி அனைத்து கட்சி கூட்டத்திற்கு சென்றபோது கர்நாடக லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் அது திட்டமிட்ட சதியாக இருக்குமா? என்று பத்திரிக்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இருப்பினும் மனம் தளராமல் அனைத்துக்கட்சி கூட்டம் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
அக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் சட்ட போராட்டம் ஒன்றே காவிரிக்கு தீர்வு என்ற அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு மட்டுமே தீர்வாக அமையும். எனவே இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுமையிலும் மிகப் பெரும் சாலை ரயில் மறியல் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்து ஒட்டுமொத்த
தமிழகமும் ஒன்று கூடி போராட்டத்தை வெற்றி பெற செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னை நீதிமன்றத்தில் நடந்து வந்த விபத்து குறித்த வழக்கு இன்றைக்கு முடிவுக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் லோக் அதாலத் நீதிபதி முன்
பிஆர்பாண்டியன்
நேரில் ஆஜர் ஆனார். நீதிபதி 2.50 லட்சம் ரூபாய் உங்களுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இந்த வழக்கைமுன்னாள் பொதுச்செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான சென்னை மாமன்ற உறுப்பினர்
சிவ.இராஜசேகரன் ஆலோசனை பேரில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இசிஆர் V.வேலு கவனத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் விவசாயிகள் சங்க தலைவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர்களுக்கு
பிஆர். பாண்டியன் நன்றி தெரிவித்துக் கொண்டார்
சென்னை மண்டல தலைவர்
சைதைசிவா உடன் இருந்தார்.
இவன் :
என்.மணிமாறன் செய்தி தொடர்பாளர்.