தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு சட்டமன்ற கொறடா கோவி. செழியன் தலைமையில் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அஞ்சிகேனி குளத்தை பார்வையிட்டு அய்வு செய்தனர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அஞ்சிகேனி குளம் மிகவும் மோசமான நிலையில் தடுப்பு சுவர்கள் இல்லாமல் பொதுமக்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர் அதைபோல் குளத்தின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த குளத்தை சரி செய்து , குளத்தை சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் படித்துறை கட்டிக்கொடுக்க வேண்டும், குளத்தை தூர்வாரி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கூத்தாநல்லூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவில் உள்ள அரசு தலைமை சட்டமன்ற கொறடா கோவி. செழியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன் , சூலூர் வி.பி.கந்தசாமி , சங்ககிரி சுந்தர்ராஜன், செய்யூர் பனையூர் பாபு ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் , உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் அஞ்சிகேனி குளம் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டறிந்தனர் உங்கள் கேரிக்கையை விரைவில் நிறைவேற்றபடும் , குளத்தை சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என உத்திரவாதம் அளித்தனர்