கிள்ளை அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகரில் ஊராட்சி ஒன்றிய இருளர் பழங்குடியினர் நடுநிலை பள்ளி உள்ளது இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு சிலர் மேற்கொண்டு படிக்காமல் இடையில் நின்று விடுகின்றனர் இதை தவிர்க்க நடுநிலைப் பள்ளியில் இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஊர்வலமாக கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கிளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர் அப்போது மாணவ மாணவிகளுக்கு சீருடை நோட்டு புத்தகங்கள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் வழங்கினார் மேலும் பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது முடிவில் தலைமை ஆசிரியர் பவானி நன்றி கூறினார்