மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டும் மன்னார்குடி அருகே தமிழக அரசு இதுவரை பாசனவாய்க்கால் தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு .
தமிழகத்தின் உணவு உற்பத்தியில் பெரும்பங்குயாற்றிவரும் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடியின் ஆரம்ப கட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரம் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயத்தை முற்றாக சார்ந்துள்ள மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம், காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமாக இருந்துவருகிறது. இம்மாவட்டத்தில் பிரதான தொழிலான விவசாயத்தை சார்ந்து லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் விவசாய பணியானது மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் பருவ மழையினை சார்ந்து குறுவை, சம்பா என இருபோக சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி குறுவை சாகுபடி பணிக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்டு உள்ளார் இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பள்ளிவர்த்தி, குருவாடி , காரியமங்கலம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொட்டையாற்றிலிருந்து பிரியும் பெரிய வாய்க்கால் தூர்வாராமலும் , மதகுகள் உடைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஒரு சிறிய மழை பெய்தால் கூட இந்த பகுதியில் மழை நீர் சூழ்ந்து விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படையும் எனவே இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையும் இந்த பாசன வாய்க்கால்களை தூர்வாரவில்லை எனவே அரசு இதனை கவனம் எடுத்து உடனடியாக இந்த பாசன வாய்க்கால்களை தூர்வாரி கொடுத்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை தொடங்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர் .
பேட்டி ஏங்கல்ஸ்