ஜூன் மாத ஒதுக்கிடான 9 டி எம் சி தண்ணீரை விடுவிக்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உத்தரவிடும் நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை என்று தெரிவித்திருப்பது முரண்பாடாக உள்ளது பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு..

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு 
இடம்:
திருத்துறைப்பூண்டி நாள்:18.06.2023

ஜூன் மாத ஒதுக்கிடான 9 டி எம் சி தண்ணீரை விடுவிக்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உத்தரவிடும் நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை என்று தெரிவித்திருப்பது முரண்பாடாக உள்ளது பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு..
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் ஜெயராமன் நெல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான நெல் திருவிழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் 
பி ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு பாரம்பரிய வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 
அதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. உரிய நிதியை ஒதுக்கீடு செய்திடவேண்டும்.

நீடாமங்கலத்தில் நெல்ஜெயராமன் பாரம்பரிய விதை உற்பத்தி மையத்திற்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு,அதில் உற்பத்தி செய்யக்கூடிய விதை நெல்லை விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்காமல் நிலுவையில் உள்ளது. எனவே உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

நெல் ஜெயராமன் நினைவாக திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய வேளாண் கருத்தரங்க கூடம் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தண்ணீரை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக அணைகளில் 20 டிஎம்சி அளவில் மட்டும் தண்ணீர் உள்ளதாகவும்,மேட்டூரில் இருக்கக்கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஜூன் மாத ஒதுக்கீடான 9 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் உடனடியாக திறந்து விட வேண்டும் என ஆணைய தலைவர் கர்நாடகாவிற்கு உத்திரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்து ஆணைய தலைவரின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது. முரண்பாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதை உணர வேண்டும்.உடன் உரிய தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யக்கூடிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மருத்துவமனைகள் ஊட்டச்சத்து மையங்களில் கட்டாய உணவுப் பொருளாக பயன்படுத்த தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். உற்பத்திக்கான பாரம்பரிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம நிரம்ப உள்ளது , அதே நேரத்தில் அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை.

உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும்,உரிய லாபகரமான விலை கொடுக்க அரசு முன்வர வேண்டும்.அதற்கான சந்தைகளை சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உருவாக்க தமிழ்நாடு அரசு சிறப்பு செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.அதனை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி முனையங்களையும், கட்டமைப்புகளையும் மாவட்டம்தோரும் உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2023 ஆம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவித்துவிட்டு, பொது வினையகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை அனுமதிப்பது இயற்கைக்கு முரணானது. பாரம்பரிய விவசாயிகளில் உற்பத்தியை முடக்கும் உள்நோக்கம் கொண்டது.  முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தங்கள் ஊடகம் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார் திருவாரூர் மாவட்ட கௌரவத் தலைவர் எம் செல்வராஜ்,, கோட்டூர் ஒன்றிய செயலாளர் ராவணன் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வமணி.திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன்.கடலூர் மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தேசிய நெல் திருவிழாவில் மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்
 டி ஆர் பி ராஜா
Previous Post Next Post