மே:29
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உத்தமபாளையத்தில் திருவுருவ சிலை நிறுவ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!
தேனி மாவட்டம் சின்னமனூர் திமுகவின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் வருகிற ஜீன் 3ல் கொண்டாட உள்ள நிலையில் இது தொடர்பாக சின்னமனூர் தனியார் மண்டபத்தில் தெற்கு மாவட்ட சார்பில் அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்தும், இந்தாண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கம்பம் நா.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் உத்தமபாளையத்தில் டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு திருவுருவ சிலை நிறுவபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் இரா.பாண்டியன் தீர்மானக்குழு இனைச் செயலாளர் ஜெயக்குமார் நகரச் செயலாளர் முத்துக்குமார் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை அனைப்பட்டி முருகேசன் பண்ணைக்குமரன் உத்தமபாளையம் பேரூர் செயலாளர் முகமது அப்துல் காசிம் மற்றும் ஆண்டிபட்டி கம்பம் கூடலூர் உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலின் ஒன்றிய நகர பேரூர் செயலாளர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.