குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்புவிழா!!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்புவிழா!!

மே:28
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் முன்னிலையில் தேனி மாவட்டம்போடிநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்றுபொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.உடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் இ.ஆ.ப,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சினாமூர்த்தி இ.ஆ.ப,நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இ.ஆ.ப,பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா இ.ஆ.ப,மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்,வி.ஷஜீவனா இ.ஆ.ப அவர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்) மகாராஜன் (ஆண்டிபட்டி) சரவணகுமார் (பெரியகுளம்) முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post