சுருளிப்பட்டி யானை கெஜம் பகுதியில் அரிக்கொம்பன் யானை.!!!
மே:28
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்:
இரா.இராஜா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் பகுதியில் நேற்று முகாமிட்டு இருந்த அரிகொம்பன் ஒற்றை காட்டு யானை அதிகாலை 3 மணியளவில் கம்பம் பைப்பாஸ் சாலைவாழைத் தோப்பை கடந்து கம்பத்தை அடுத்து சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டி நாராயண தேவன் பட்டி ஊருக்குள் நுழைந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது. அதனைத் தொடர்ந்து இப்ப பகுதி வாழ் மக்களுக்கு ராயப்பன்பட்டி காவல்துறை மூலம் ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படியும் பொது வெளியில் நடமாடக்கூடாது எனவும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்கவும் குழந்தைகளை பாதுகாக்கவும் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். மேலும் அரி கொம்பன் யானையை பிடிப்பதற்காக கும்கி யானை சுயம்பு, அரிசி ராஜா மற்றும் ஒரு யானை ஆக மூன்று யானைகள் கம்பம் நகருக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்கள் சுருளிப்பட்டி கூத்தநாச்சி கோவில் அருகில் வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது பொதுமக்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது அதேபோல் அரிக்கொம்பன் யானைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் யானையைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என வனத்துறை அமைச்சர் மதிவேந்திரன் அவர்கள் கூறினார் தற்போது வனத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி சஜீவனா தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் சுருளிப்பட்டி பகுதியில் இருக்கும் யானை கெஜம் பகுதிக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். கூத்தனாட்சி கோவில் அருகே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களும் விவசாய நிலங்களுக்குச் செல்லக்கூடிய கூலி தொழிலாளர்களையும் காட்டுபகுதிக்குள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு காவல்துறையும் வனத்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கம்பம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அடுத்து பொதுமக்கள் பொதுவெளிகளில் நடமாடவும் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள் கேரள மாநிலம் மற்றும் தமிழக பத்திரிகையாளர்கள் அனைவரும் சுருளிப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ளனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் வனத்துறை அதிகாரிகள் சந்தித்து விட்டு வந்து பத்திரிகையாளர்களிடம் கூறியது தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி மேகமலை காட்டிற்குள் நுழைந்துள்ளது தமிழக வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்ற தகவலை கூறினார்.