கம்பத்தில் அரிசி கொம்பன் யானை மக்கள் பீதியடைய வேண்டாம்......

கம்பத்தில் அரிசி கொம்பன் யானை மக்கள் பீதியடைய வேண்டாம்......
மே:27
ஆவணம்:2
உத்தமபாளையம் செய்தியாளர்:
இரா.இராஜா



 தேனி மாவட்டம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் வனப்பகுதியில் இருந்த அரிசி கொம்பன் யானையை தேனி மாவட்டம் குமுளி புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் கேரளா வனத்துறையினர் கொண்டு வந்து விட்டனர்.அதனைத் தொடர்ந்து இந்த அரிசி கொம்பன் யானையானது தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள் சென்று அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்து வந்த நிலையில் தற்போது நேற்று லோயர் கேம்ப் பகுதி வழியாக அதிகாலை கம்பம் பகுதியில் வந்தடைந்தது கம்பத்தில் நகரின் முக்கிய பகுதியான நாட்டுக்கள் நந்தனார் கோவில் உள்ளே சென்று மீண்டும் தெருக்கள் வழியாக வந்து புளியந்தோப்பில் தஞ்சமடைந்தது. அப்போது எதிரே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கிழே விழுந்து காயமடைந்தவர்களை கம்பம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஐந்து மணி  நேரம் ஆகியும் அமைதி காத்திருந்த நிலையில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் உத்தமபாளையம் கோட்டாட்சியர்  பால்பாண்டியன் மற்றும் உத்தமபாளையம் வட்டாட்சியர் சந்திரசேகர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே இ.கா.ப., மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து அரிகொம்பன் யானையை எந்தவித பாதிப்பும் இல்லாமல் மக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் பிடிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வீ.ஷஜீவனா இ.ஆ.ப.,அவர்கள் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து செல்ல காவல்துறை அதிகாரிகள் ஆட்டோவில் ஒலிபெருக்கி அமைத்து மக்கள் தெரிவிக்கின்றனர் அச்சமயம் அமைதிச் சூழல் நிலவி வந்த நேரத்தில் youtuber ஒருவர் யானை இருக்கும் பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்க விட்ட நிலையில் யானை மிரண்டு மீண்டும் அடுத்த பகுதியை  நோக்கி ஓடத் தொடங்கியது இதனால் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டது. யானையை பின் தொடர்ந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தற்போது எம்எல்ஏ தோப்பு என்று அழைக்கப்படும் வாழை தோப்பில் தஞ்சம் அடைந்து உள்ளது காவல்துறையினரும் வனத்துறையினரும் இப்பகுதியில் முகமிட்டுள்ளனர் 144 தடை தொடர்ந்து மக்கள்வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்த படுகிறார்கள் தற்போது கம்பம் பகுதியில் இருந்து யானையை எவ்வாறு வனப்பகுதியில் விரட்ட போகிறார்கள் என்று மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர் .....
Previous Post Next Post