பு.முட்லூரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

பு.முட்லூரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் பு.முட்லூர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் கோடை கால நீர் மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசனி, வெள்ளரிகாய், நீர் மோர் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், , மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, பொதுக்குழு உறுப்பினர்கள் கர்னா, முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள் வரவேற்றார். 
நிகழ்ச்சியில் கிள்ளை நகர செயலாளர், தமிழரசன்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரவி, பாஸ்கர், ஆனந்தஜோதி சுதாகர், , நிர்வாகிகள் வீரமணி, ஜெய்சங்கர டேங்க் சந்தோஷ், வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய கழக அவைத் தலைவர் பேராசிரியர் ரெங்கசாமி நன்றி கூறினார்.
Previous Post Next Post