மத்திய அரசு நிலக்கரி திட்டத்தை கொள்கை பூர்வமாக கைவிடுகிற வரையிலும் விவசாயிகள் எச்சரிக்கோடு இருக்க வேண்டும் உள்ளிக்கோட்டை தெருமுனை கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் வேண்டுகோள்..

பத்திரிக்கை ஊடக செய்தி அறிக்கை 
இடம்: 
உள்ளிக்கோட்டைமன்னார்குடி
நாள்: 08.04.2023 
மத்திய அரசு நிலக்கரி திட்டத்தை கொள்கை பூர்வமாக கைவிடுகிற வரையிலும் விவசாயிகள் எச்சரிக்கோடு இருக்க வேண்டும் உள்ளிக்கோட்டை தெருமுனை கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் வேண்டுகோள்.. 

காவிரி டெல்டாவில் மத்திய அரசு சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு ஏலம் விட்டதை எதிர்த்து கடந்த 4ம் தேதி உள்ளிக்கோட்டை கடைவீதியில் மத்திய அரசின் அறிவிப்பாணை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம்.அதன் விளைவாக தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். 

சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.48 மணி நேரத்தில் மத்திய அரசு டெண்டரை நிறுத்தி உள்ளதை வரவேற்கிறோம். இதற்கு பின்புலமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறோம். 

அதே நேரத்தில் மத்திய அரசை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்டிப்படைக்கிறது.ஏற்கனவே அதானிக்கு ஒப்பந்த செய்த அடிப்படையில் நெய்வேலி நிலக்கரி சுரங்கமும் அதனுடைய துணை கிணறுகளுக் அனுமதியும் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் தான் தற்போதைய நிலக்கரி சுரங்க டெண்டர் நடந்து வருகிறது. அரசியல்வாதிகள் கூட அதானி பெயரிலும் அம்பானி பெயர்களிளும் களமிறங்க துணிந்து விட்டார்கள். 

உலகத்திலேயே மிகப்பெரிய வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக நிலக்கரி சுரங்க தொழில் உருவாக்கியுள்ளது.எனவே வணிகம் மீது மோகம் கொண்ட அரசியல்வாதிகள் கார்ப்பரேட் பின்புலத்தோடு உள்ளே நுழைவார்கள். எனவே நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உண்டு அந்தக் கொள்கை வாக்களிப்பதற்கு மட்டுமே தானே தவிர,நம் உரிமைக்கான போராட்டங்களில் அரசியல்வாதிகள் நம்மோடு துணை இருப்பார்கள் என்று நம்பக்கூடாது. எச்சரிக்கையோடு விவசாயிகள் தன் மண்ணைக் காக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். 

மன்னார்குடியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ரயில்வே பாதை உள்ளதாகவும், நீடாமங்கலத்தில் இருந்து கொச்சின் துறைமுகத்திற்கும்,நாகப்பட்டினம் துறைமுகங்களுக்கும் நேரடி ரயில் பாதை உள்ளது. 

மேலும்  திருமக்கோட்டையில் சுழலி மின் உற்பத்தி நிலையம் இருக்கிறது. கிடைக்கக்கூடிய மீத்தேன் வாயிவை பயன்படுத்திக் கொள்ள முடியும். உடனடி மின்சார தேவைக்காக உள்ளிக்கோட்டையில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் நிலக்கரி சுரங்க வாய்ப்பு குறித்தான முன்னோட்ட அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மிகப்பெரும் அதிர்ச்சியாக உள்ளது.எனவே நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசியல் என்பது நம் கொள்கைக்கானது.நம் வாழ்வியலுக்கானது விவசாயம் மட்டுமே. 

நம் மண்ணை காக்க நாம் மட்டும் உறுதியோடு இருக்க வேண்டும். ஒற்றுமையோடு இருக்க வேண்டும். அந்த உறுதி ஏற்கும் நிகழ்வாக இந்த போராட்டம் அமைந்துள்ளது என்றார்.

நிகழ்ச்சிக்கு மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பி கே கோவிந்தராஜ், மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார். ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிமாறன் அஇஅதிமுக சார்பில் ரவீந்திரன் வணிகர் சங்க தலைவர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இவன் : என்.மணிமாறன்,
செய்தி தொடர்பாளர்.
Previous Post Next Post