தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவ மாணவிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரகோட்டை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் கல்லூரியின் தாளாளரும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது .
மாணவ மாணவிகள் தங்களது கல்வியில் ஒரு இலக்கை ஏற்றுவது பட்டப்படிப்பில் அதற்கு அத்தாட்சியாக வழங்கப்படுவது தான் பட்டம். மேலும் பல குடும்பங்களில் இன்னும் முதல் தலைமுறை பட்டதாரிகளும் உள்ளனர் அவர்களுக்கு பட்டம் பெறுவதெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியாகும்.
மாணவ மாணவிகள் அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற பின்னர் அவர்களுக்கு புரோவிஷனல் சர்டிபிகேட் வழங்கப்படுகிறது அது ஆறு மாதம் மட்டுமே செல்லுபடியாகும் மற்றபடி பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டம் மட்டுமே அவர்களுக்கு படித்ததற்கான சான்றிதழாகும். ஆனால் கடந்த இரண்டு பேச்சுகளுக்கு தமிழகத்தில் எந்த பல்கலைக்கழகமும் பட்டம் வழங்கவில்லை தற்போது மூன்றாவது பேட்ஸ் மாணவர்கள் பட்டம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பட்டம் வழங்கும் நிகழ்ச்சி இதுவரை மீண்டும் கொடுக்கப்படவில்லை.
நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் பட்டங்களை வழங்கி விடலாம் என்ற போதும் எந்த பல்கலைக்கழகமும் பட்டம் வழங்குவதற்கு முன்வரவில்லை. இதனால் பட்டப்படிப்பு முடித்து வேலைகளில் சென்றவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு கொண்டுள்ளது அவர்கள் படித்ததற்கான சான்றிதழாக பல்கலைக்கழக பட்டம் உள்ள நிலையில் இதுவரை பட்டம் வழங்காதது அவர்களது வேலையினையும் பாதிக்கும். எனவே உடனடியாக ஆளுநர் இந்த விஷயத்தில் தலையிட்டு பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கூறினார்