பாதிக்கப்பட்ட நபர் புகார் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நீடாமங்கலம் காவல்நிலையத்தில் குடும்பத்தினருடன் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி .
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர் காவல்துறையை கண்டித்து மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து நீடாமங்கலம் காவல்நிலையத்திலும் காவல்துறையை கண்டித்து இளைஞர் குடும்பத்தினருடன் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே அரையூர் கிராமத்தை சேர்ந்த உலகநாதன், அவரது மனைவி சத்தியா ஆகிய இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான இடம் பாப்பையன்தோப்பு என்ற இடத்தில் இருந்துவருகிறது. இந்நிலையில் உலகநாதன் தனக்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த உலகநாதன் சகோதரர் சுந்தராஜன் அதே பகுதியை சேர்ந்த தனது ஆதரவாளர்களான ராஜேஷ் , கோபால் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு உலகநாதனிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் உலகநாதனை கட்டை மற்றும் ஆயுதங்களால் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் உலகநாதன் படுகாயம் அடைந்த நிலையில் தப்பியோடியுள்ளார். பின்னர் அருகில் உள்ளவர்கள் உலகநாதனை மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது சம்மந்தமாக உலகநாதன் நீடாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தபோதிலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்திவந்ததோடு ஒரு பிரிவினருக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளனர். இதனால் கடந்த இரு தினங்களாக மன உளைச்சலில் இருந்து உலகநாதன் அவரது தாய் மற்றும் மனைவி சத்தியா ஆகியோருடன் இன்று நீடாமங்கலம் காவல்நிலையத்திற்கு வந்து புகார் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க கோரியதோடு குடும்பத்தினர் 3 பேர் உடம்பில் மண்ணெண்னையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர் . அருகில் இருந்து காவலர்கள் அவர்களது உடம்பில் தண்ணீரை உற்றி உலகநாதனை சமாதானம் செய்தனர். பாதிக்கப்பட்டவரது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையினர் பலத்த ஆயுதங்களைக்கொண்டு தாக்கியவர்களுக்கு ஆதரவாக இருந்துவருவதை அறிந்த உலகநாதன் தனது குடும்பத்துடன் நீடாமங்கலம் காவல்நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE NAME : MANNARGUDI SUCIDE ATTEMPT NEWS 29.04.2023