நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு .

நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு  .

 நவக்கிரகங்களில் முக்கிய கிரகமும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக கொண்டாட ப்படுகிறது . வக்கிரகங்களில் குருவிற்கும், சனிவிற்கும் தனி இடம் உண்டு.  இந்த இரண்டு கிரகங்களும் இடம்பெயரும் நேரத்தில் ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 ராசிகளுக்கும் பலன்கள் வகுக்கப்படுகின்றன . அந்த வகையில் இன்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.  குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது ஜென்மராசி எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 7 ராசிக்காரர்களும் பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த  ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தழுளியுள்ள குருபகவானுக்கு குருப்பெயர்ச்சியையொட்டி கடந்த 16ம் தேதியிலிருந்து தினசரி இலட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று வருகின்றன.   நவக்கிரகங்களில் குருபகவான் பொதுவாக நற்பலன்களை அளிக்க கூடியவராக விளங்குகிறார்.  மேலும் குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது, ஜென்ம ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது சிறந்ததாகவும், குறிப்பாக கல்வி, தொழில் ஆகியவற்றில் மேன்மை அளிப்பவராகவும், திருமணதடை நீக்கி அருள்பாலிப்பவராகவும் குருபகவான் விளங்குகிறார்.             குறிப்பாக இவ்வாலயத்தில் ஆலமரத்தின் அடியில் விற்றிருக்கும் குருபகவான் நவக்கிரக தோஷங்களில் பிரகஸ்பதி எனும் தோஷசத்தை நீக்கி அருளிபாலிக்கிறார். இதன் அடிப்படையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி;ல் இருந்து திரளான  திரளான பக்தர்கள் ஆலங்குடி குருபகவானை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர். 
Previous Post Next Post