கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மன்னார்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரம்ஜான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது ,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி , கூத்தாநல்லூர், உள்ளிட்ட இடங்களில் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் தவ்ஹீத் ஜமாத் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் , ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து ஈதுல் பித்ரு எனப்படும் ஈகை திருநாளாக ரம்ஜான் பெருநாளை கொண்டாடி வருகிறனர் , பசியின்றி சந்தோஷமாக அனைவரும் சமமாக கொண்டாட வேண்டி தொழுகைக்கு முன்னர் ஈகைபெருநாளில் தர்மங்கள் செய்து கொண்டாடினர். மேலும் ரம்ஜான் தொழுகையில் இறைவனிடம் அனைவரின் நலத்திற்கும் வளமான அமைதியான வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்தனர் , திருவாரூர் வடக்கு மாவட்ட அனைத்து கிளைகளிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ரம்ஜான் பெருநாள் தொழுகையில் ஆண்கள் ,பெண்கள் , குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.