மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் .சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் .சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மொத்தம் உள்ள 5 நீதிமன்றங்கள் நகரத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இவற்றில் 175க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வழக்காடி வருகின்றனர். இந்த நீதிமன்றங்களுக்கு மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பல்வேறு வழக்குகளுக்காக நாள்தோறும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 5 நீதிமன்றங்களும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.. இதன் காரணமாக, மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஒன்றை அமைத்து தருமாறு வழக்கறிஞர்கள், கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், வழக்கறிஞர் சங்க தலைவர் இளஞ்சேரன் தலைமையில் வழக்கறிஞர்கள் திமுக பொருளாளர், நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்பியை நேரில் சந்தித்து மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அமைக்க கோரி மனு அளித்தனர். இதையடுத்து, டி ஆர் பாலு எம்பியின் பரிந்துரையின் பேரில் மன்னார்குடி மதுக்கூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து நகராட்சியில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலுடன் மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அமைக்க விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிலையில், மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆர்.சுரேஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Previous Post Next Post