கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டி

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டி


 

*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர்  சங்கம் மற்றும் அமைப்புசாரா ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள்  கூட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள AITUC தலைமை அலுவலகத்தில் பொறுப்பாளர் தோழியர் M மருதாம்பாள் தலைமையில் 7.4.2023 மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது கூட்டத்தில் AITUC கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு வழிநடத்தினார் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது* 

*கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டியும்* 

*ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் இயற்கையாக மரணமடைந்தால் இயற்கை மரண நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும்* 

 *ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும்* 

*ஓய்வூதியம் பெரும் தொழிலாளர்கள் மரணமடைந்தால் ஈமச்சடங்கு நிதியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும்* 

*ஓய்வூதியதாரருக்கு இ எஸ் ஐ அடையாள அட்டை வழங்க வேண்டும்* 

 *ஓய்வூதியதாரருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்*  

*கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வழங்கும் ரூபாய் 4லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் கிடைக்க வேண்டும்*

*உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழர் S முத்தழகு மாதர் சங்க ஒன்றிய பொருலாளர் தோழியர் M ரஷியாபேகம் உள்ளாட்சி சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழியர் J நதியா கட்டட சங்க கீழவயலூர் கிளை தலைவர் தோழர் T ஜெயச்சந்திரன் மற்றும் சின்னையன் மருதை சரஸ்வதி ராமு கௌரி மல்லிகா பார்வதி தனலெட்சுமி ரெங்கராஜ் லெட்சுமி சின்னம்மாள் சரஸ்வதி நாகரத்தினம் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கூட்ட முடிவில் தோழர் S முத்தழகு நன்றி கூறினார்* 

*தோழமையுடன்* 
*MR முருகன்* 
*திருச்சி மாவட்ட தலைவர்* 
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம்* 
*தொடர்புக்கு 8428053002 நன்றி*
Previous Post Next Post