கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சேதம் அடைந்த டிரன்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்படாத காரணத்தால் கோடை சாகுபடி கேள்விகுறி: மன்னார்குடி விவசாயிகள் வேதனை…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த 54 நெம்மேலி கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் அதனை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஆண்டுதோறும் பம்பு செட் முலம் கோடை பருவ சாகுபடி பணியினை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் செய்துவருவது வழக்கம். குறிப்பாக கோடை சாகுபடி பணிக்கு மின்சார தேவை என்பது அவசியமான ஒன்று. ஆனால் இக்கிராமத்தில் கடந்த 2017 வீசிய கஜா புயலின்போது உயர்அழுத்த மின்மாற்றி அதாவது டிரான்பார்மர் சேதம் அடைந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோடை சாகுபடி பணியினை கடந்த 6 ஆண்டுகாலமாக சரிவர செய்யமுடியாமல் அவதியுற்று வருகின்றனர். இது சம்மந்தமாக தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மின்வாரிய உயர் அதிகாரிகள் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல ஆண்டுகாலமாக கோரிக்கை மனு அளித்துவரும் போதிலும் டிரான்பார்மர் மாற்றியமைக்கப்படாமல் விவசாயிகள் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். இதுதவிர டிரான்பார்மர்; பழுதுகாரணமாக கோடைக்காலங்களில் வீடுகளுக்கு மின்சாரம் சரிவர கிடைக்காமல் பள்ளி குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து தனிகவனம் செலுத்தி கடந்த 6 ஆண்டுமுன்பு சேதம் அடைந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி டிரான்பார்மரை அமைத்து தந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி
1, குருநாதன் விவசாயி 54 நெம்மேலி