காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட மறுத்தால் பிரதமர் தமிழக வருகையை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மன்னாா்குடியில் பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் நடைமுறையில் உள்ள போது மத்திய அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கலந்து பேசாமல் தொடர்ந்து பேரழிவு திட்டங்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக கடந்த ஜனவரி மாதம் வீராணம் நிலக்கரி திட்டம் என்கிற பெயரில் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்கு மத்திய அரசின் கனிமவாத்துறை முயற்சிகளை மேற்கொண்டது. அதனை தடுத்து நிறுத்தி உள்ளோம். ஆய்வுக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் திடீரென தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கான முதல் கட்ட ஒப்பந்த பள்ளி கோரப்பட்டுள்ளது. இதனை அறிந்து மன்னார்குடியில் அருகே உள்ளிக்கோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளோடு இணைந்து போராட்டத்தில் மத்திய அரசின் அனுமதி குறித்தான கடிதங்களை வெளியிட்டு உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். சட்டவிரோதமாக நிலக்கரி திட்ட அறிவிப்பானை நகலை தீயிட்டு கொளுத்தினோம் எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் மூலம் திட்டத்தை கைவிட வலியுறுத்தினார். தொடர்ந்து சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் திட்டத்திற்கு எதிராக வலியுறுத்தியதின் அடிப்படையில் ஒத்த கருத்தோடு திட்டத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளதை காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம், முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒத்தக் கருத்தோடு குரல் கொடுத்தது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையு தெரிவித்துக்கொள்கிகிறோம். பாஜக தமிழக தலைமையும் மத்திய நிலக்கரி துறை அமைச்சரை நேரில் சந்தித்து கைவிட வலியுறுத்தியதையும் குறிப்பிட விரும்புகிறோம். அனைத்து கட்சிகள் மற்றும் சட்டமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பாரதப் பிரதமர் நேரில் தலையிட்டு உடனடியாக காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அறிவிக்கப்பட்டு டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலக்கரி திட்டத்தை நிரந்தரமாக கைவிட கொள்கை பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும் . தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வுரிமையை கருத்தில் கொண்டு பிரதமர் உடனடியாக கைவிட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிராக விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்