மன்னார்குடியில் சாந்தி திரையரங்கில் கண்ணை நம்பாதே படம் வெளியீட்டு விழா திமுக இளைஞரணி சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள வழங்கப்பட்டது ….
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள கண்ணை நம்பாதே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் பல்வேறு வகையில் மேள தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாந்தி திரையரங்கில் கண்ணை நம்பாதே படம் வெளியீட்டு விழாவில் திருவாரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது அதனைதொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க், கையுறை ,ஒளிரும் உடைகள் உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் மன்னை த.சோழராஜன், நகரசெயலாளர் வீராகணேசன் , உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற திருவாரூர் மாவட்ட துணை தலைவர் கு.ப.அழகரசன் , மன்னை ஒன்றிய பரிந்துரையாளர் டாக்டர் பிரசன்னராஜ் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்