திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டபரவாக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் பாதையினை ஆக்கிரமித்துள்ள நபருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளின் போக்கை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட
பரவாக்கோட்டை   அரசு    மருத்துவமனைக்கு    செல்லும் பாதையினை  ஆக்கிரமித்துள்ள   நபருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளின் போக்கை கண்டித்து  கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்… 
 போலிசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரவாக்கோட்டை கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  மாவட்டத்திலேயே மிகப்பெரிய  ஊராட்சியாக விளங்கும் பரவாக்கோட்டை கிராம மக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம்  அரசு மருத்துவமனை கட்டுவதற்காக  4 ஏக்கர் பரப்பளவிலான  இடத்தினை தேர்வு செய்து அரசுக்கு அளித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் அரசு புறம்போக்கு பாதையினை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனது பெயருக்கு பட்டாவாங்கிய தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் இவரது அராஜகத்தால் அவ்வழியாக உயிரழந்த சடலத்தினை எடுத்து செல்லவும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கிராமமக்கள் மனவேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு அதிகாரிகள் நியாயமற்ற முறையில் பட்டா வழங்கிய நடவடிக்கையால் பரவாக்கோட்டை பகுதியில் கட்டப்பட இருந்த  அரசு மருத்துவமனைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும். மேலும் இப்பகுதியில் உயிரழந்த சடலங்களை கொண்டு செல்லமுடியாத நிலைக்கு அரசு அதிகாரிகள் ஆளாக்கிவிட்டதை கண்டித்தும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுத்து அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கிராமமக்கள் நூற்றுக்கணக்கர்னோர் மன்னார்குடியிலிருந்து  பட்டுக்கோட்டை செல்லும் சாலை  மார்க்கத்தில் பரவாக்கோட்டையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்  அப்பகுதியில் 3  மணி நேரத்திற்கு மேலாக  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பின்னர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்கானிப்பாளர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் உடன்பாடு ஏற்படததால் இரண்டு தரப்பினரிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது …
Previous Post Next Post