தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர்- தாசர அள்ளி வழி நடுப்பட்டி உள்ள அருள்மிகு சிங்காரவேல முனீஸ்வரர் கோயிலில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பக்த கோடிகள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள்

 தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர்- தாசர அள்ளி வழி நடுப்பட்டி உள்ள  அருள்மிகு சிங்காரவேல முனீஸ்வரர் கோயிலில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பக்த கோடிகள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் அதிக அளவு  மக்கள் ரயில்  மூலமாகவும் பஸ்கள் மூலமாகவும் வடார் கார்டு மாவட்டத்தில் இருந்து அதிக மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள் அவர்களை வேண்டுதலை சிறப்பாக நிறைவேற்றிக் கொடுக்கிறார் முனீஸ்வரர் இங்கே வரும் பக்தர்கள் கோழி அல்லது ஆடு நேர்த்திக்கடனாக பலியிட்டு நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள் மேலும் இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்த  கோவிலாக திகழ்கிறது  இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை வைத்துவிட்டு செல்கிறார்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்கிறார்  பல்வேறு மாவட்டங்கள் குறிப்பாக திருப்பத்தூர் வேலூர் வாணியம்பாடி ஆம்பூர் குடியாத்தம் கர்நாடகா சித்தூர் வரை வந்து செல்கிறார்கள் இந்த கோயிலுக்கு அடிப்படை வசதிகள் தேவை அந்த அடிப்படை வசதிகள் குறிப்பாக பாத்ரூம் வசதிகள் இல்லாததால்  மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்  இதனை இந்து அறநிலைத்துறை சார்பாக பக்த கோடிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது
Previous Post Next Post