ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலர் வீட்டில் 120 பவுன் நகை ரூ. 3.50 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை நீடாமங்கலம் காவல்துறையினர் கொள்ளையரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே தஞ்சை , திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஆதனூர் மண்டபம் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் குருமூர்த்தி & கலைச்செல்வி தம்பதியினர். குருமூர்த்தி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் . குருமூர்த்தியின் மூத்த மகள் கோமதி திருமணமாகி தஞ்சாவூரில் வசித்து வருகிறார் . இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு குருமூர்த்தி உடல் நிலை பாதிக்கப்பட்டு. குருமூர்த்தி & கலைச்செல்வி தம்பதிகள் இருவரும் ஆதனூர் மண்டபதில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு, தஞ்சாவூரில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். . அதனை தொடர்ந்து குருமூர்த்தி தஞ்சாவூரில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார் .
சிகிச்சை முடிந்து மூன்று நாட்கள் கழித்து இன்று மதியம் வீடு திரும்பிய குருமூர்த்தி & கலைச்செல்வி தம்பதியர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்து கண்டு சந்தேகமடைந்து வீட்டை பார்த்த போது வீட்டின் கதவு , பிரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த ரூ. 3.50 லட்சம் பணம், மற்றும் 120 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து நீடாமங்கலம் காவல்துறைக்கு குருமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கைரேகை, தடவியல் நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து வருகிறனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் தங்கத்தை மட்டும் திருடிவிட்டு குழந்தைகள் அணியும் வெள்ளி கொலுசு , தண்டையம் போன்றவற்றை விட்டு விட்டு சென்றுள்ளனர் .
120 பவுன் நகை, ரூ. 3.50 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் நீடாமங்கலம் பகுதி மக்களிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி
கோமதி பாதிக்கபட்ட குருமூர்த்தியின் மூத்த மகள்
முத்து