மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று உலக புகழ்பெற்ற வெண்னைத் தாழி உற்சவம் நவநீத சேவையில் பல்லாயிரகணக்காண பக்தர்கள் தரிசனம் .

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று உலக புகழ்பெற்ற  வெண்னைத் தாழி உற்சவம் நவநீத சேவையில் பல்லாயிரகணக்காண பக்தர்கள் தரிசனம் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலக புகழ்பெற்ற வெண்ணைத்தாழி திருவிழா இன்று நடைபெற்றது. தவழும் கண்ணனாக வந்த ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து பக்த்தர்கள் வழிபட்டனர். இக்கோயில் ஆண்டுதோறும்  18 நாள் பங்குனித் திருவிழாவும், அதனை  தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். இந்தாண்டு திருவிழா  சென்ற 11  -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
முக்கிய 16-ம் நாள் திருவிழா வெண்ணைத்தாழி உத்சவம் 
நிகழ்ச்சி இன்று காலை 5.30 மணிக்கு துவங்கியது. சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கையில் வெண்ணைய் குடத்தை  ஏந்தி தவழும் கண்ணனாக வந்த ராஜகோபாலனின் முன், பின் அலங்காரங்களை கண்டு பக்த்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை அடித்து கோபாலா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி வழிபாட்டனர்  . சுமார் 4 கிலோமீட்டர் தூரம்  சுவாமி வீதியுலாவில் உள்ளுர் பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளிமாவட்ட , வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் பல்லாயிரம் கணக்கானோர் இந்த வெண்ணைத்தாழி திருவிழாவில் பங்கேற்றனர்.  நகரம் முழுவதும் விழாக்கோலமாக காணப்பட்டது 
Previous Post Next Post