ONGC குளிக்கரை ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பிப்ரவரி 21ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை பிஆர்-பாண்டியன் அறிவிப்பு..

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு 
இடம்:குளிக்கரை திருவாரூர் 
நாள்:13.02.2023

ONGC குளிக்கரை  ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பிப்ரவரி 21ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை 
பிஆர்-பாண்டியன் அறிவிப்பு.. 
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் 
பிஆர்.பாண்டியன் திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் ஏற்கனவே மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் இயற்கை எரிவாய் எடுக்கும் கிணறு முடிவுற்ற நிலையில் 2016க்கு முன்னதாகவே மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திடீரென அக்கிணற்றில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு பணிகளை சட்ட விரோதமாக துவக்கி உள்ளது. இதனை நேரில் பார்வையிட சென்ற 
பிஆர் பாண்டியன் அனுமதியின்றி கிணறு அமைப்பது சட்டவிரோதம் என்று தெரிந்தும் எப்படி அமைக்கிறீர்கள்? என ONGC அதிகாரிகளிடம்கேள்வி எழுப்பினார். நாங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிணறு அமைக்க போகிறோம் என்பதை தகவலாக அனுப்பி விட்டோம்  என்றனர். மாவட்ட ஆட்சியர் அதற்கு அனுமதி கொடுத்துள்ளாரா? அப்படி இருப்பின் அனுமதி நகலை கொடுங்கள் என்று கேட்டோம். நாங்கள் அனுமதி பெறவில்லை என்று சொன்னார்கள். மாவட்ட ஆட்சியர் வாய்மொழியாக கிணறு பராமறிக்க சொன்னதாக அவர்கள் தெரிவித்தார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.

2022 ஜூலை 27ல் பெரியகுடி கிணறு பராமறிக்க முயற்சித்தபோது போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது மாவட்ட ஆட்சியர் நடத்திய சமாதான பேச்சு வர்த்தையில் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு புதிய கிணறுகள் அமைக்கவோ, பழைய கிணறுகளை பராமரிப்பு செய்யவோ தமிழக அரசின் அனுமதியின்றி உள்ளே நுழையக்கூடாது. தமிழக அரசும் கொள்கை முடிவு எடுத்துள்ளதால் இனி புதிய கிணறுகளுக்கோ, பழைய கிணறுகளை பராமரிப்பு செய்யவோ அனுமதி இல்லை என்பதை உத்திரவிட்டதோடு எழுத்துபூர்வமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னரும்  சட்டவிரோதமாக நீங்கள் துவக்கி உள்ளீர்கள்.இதனை  நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் சொல்லிவிட்டோம் என்கிற ஒற்றை வரியிலேயே மீண்டும் பதில் அளித்தார்கள். 

எனவே தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக ஓஎன்ஜிசிக்கு துணை போகிற அதிகாரிகளை கண்டித்து வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். முதலமைச்சர் உடன் தலையிட்டு நிரந்தரமாக காவிரி டெல்டா பாதுகாக்க முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார். 

திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Previous Post Next Post