திருவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யாத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம்,
கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யாத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி ஊராட்சியில்  தெருக்களில் உள்ள சாலைகள் குண்டு குழியுமாக உள்ளது, சாலைகளை சீரமைக்க வேண்டும், இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும், ஊராட்சியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் குப்பைகளை தினந்தோறும் முறையாக அகற்ற வேண்டும், வடிகால் வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்.. பொதுமக்கள் நலன் கருதாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பொதக்குடி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நீடாமங்கலம் வட்டார ஊராட்சி அலுவலரை கண்டித்து அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பொதகுடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FILE NAME  : MANNARGUDI PROTEST AGAINST PANJAYATH  NEWS 14.02.2023
Previous Post Next Post