தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள செடி மற்றும் மரங்களில் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு.
பிப்:11
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் மருத்துவ மனைக்குள் பெரும் விபத்து தவிர்ப்பு.
தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் ஆறு ஏக்க நிலப்பரப்பில் அமைந்துள்ளது கம்பம் அரசு மருத்துவமனை.
இந்த மருத்துவமனைக்கு தினமும் கம்பம் நகர் மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட நோயாளிகள் இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோன்று 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சீமாங் சென்டரும் உள்ளது.
இந்நிலையில் இன்று மருத்துவமனை வளாகப் பகுதியில் உள்ள புதர் மண்டிய பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்து அருகில் இருந்த மரங்களிலும் தீப்பற்றிக் கொண்டது. இந்த தீயினை அணைக்க அங்கு பணிந்து வரும் மருத்துவ செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தண்ணீர் கொண்டு அனைத்தும் தீ கட்டுக்குள் வராததால் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஜேசிபி உதவியுடன் தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தினால் மருத்துவமனை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இருப்பினும் இந்த தீ பிடித்த பகுதியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர் அறை பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் இப்பகுதியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீயானது தானாக பற்றிக் கொண்டதா? அல்லது வேறு நபர்கள் யாரும் தீயை பற்ற வைத்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.