மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து உத்தமபாளையம் பைபாஸில் ஆர்ப்பாட்டம்.........
பிப்:28
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
மத்திய மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற 8 3/4 வருடம் ஆகிறது மக்கள் வாழ்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது இந்தியாவின் மக்கள் தொகையில் 40 சதவீதம் அதிகமான செல்வத்தை ஒரு சதவீதம் பேர் வைத்துள்ளனர். ஒரு பக்கம் செல்வம் குவிகிறது மறுபக்கம் வறுமை வாட்டுகிறது இந்த 8 3/4 ஆண்டுகளில் 28 1/2 லட்சம் கோடி ரூபாய் டீசல் மூலம் மோடி அரசு மக்களிடம் வெளியே உயர்த்தி வசூல் செய்துள்ளது. எரிவாயு ரூபாய் 450 விற்ற சிலிண்டர் இன்றைக்கு 1150 ரூபாய்க்கு விற்கிறது. இதில் விவசாய உரம் மானியம் விலை மானியம் சொட்டு நீர் மானியம் என அனைத்தும் வெட்டப்படுகிறது. பெரிய முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி அதனைத் தொடர்ந்து வரி சுவை விலை ஏற்றம் விரோத கொள்கைகளை மறைக்க மத வெறுப்பு அரசியலை நாடகம் மக்கள் ஒற்றுமையை சிதைக்கிற பணியை தொடர்ந்து மோடி அரசு செய்து வருகிறது . புதிய வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய புதிய திட்டங்களையும் மக்கள் வாங்கும் சக்தியை அதிகரிக்க பட்ஜெட்டில் இடம் பெறவில்லை
கோரிக்கைகள்
பெட்ரோல் டீசல் பஸ் நிலையம் வலியுறுத்தி அத்தியாவசிய பண்டங்களை மீது போடப்பட்டு இருக்கின்ற ஜிஎஸ்டி வரியை வாபஸ் பெறு.
100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாயை பணம் ஒதுக்கி ஜாப் கார்டு உள்ள அனைவருக்கும் வேலை வழங்கு.
அதாணியின் பல லட்சம் கோடி மோசடி மீது முழுமையான உச்ச நீதிமன்றத்தின் கீழ் விசாரணையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையையும் அமைத்திடு .
உரம் மானியத்தை வெட்டாமல் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கு.
புதிய கல்விக் குழு பாடத் திட்டத்தில் மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்துக்களை அகற்று இந்தி திணிப்பை கைவிடு.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய புதிய திட்டத்தை அமலாக்கு மத்திய அரசின் காலியிடங்களை நிரப்பு நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் உதவி மத்திய அரசின் மூலம் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடு.
சாமிநாதன் பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடு.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு செல்வ வரியை உயர்த்தி மறைமுக வரியை குறைத்து மக்கள் வாங்கும் சக்தியை அதிகரிக்க வலியுறுத்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தமபாளையம் பைபாஸ் திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியினர் எஸ் எம் இப்ராஹிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் கட்சியின் தோழர்கள் நாகராஜன் மாவட்ட செயற்குழு சங்கரசுப்பு விவசாய தொழிலாளர் சமாதானம் மாவட்ட செயலாளர் சஞ்சீவிகுமார் ஏரியா செயலாளர் மற்றும் லட்சுமணன் சுருளி தங்கமாகி நந்தினி சீனிவாசன் ஆனந்தன் பெரிய முத்து அன்பழகன் மற்றும் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.