மார்ச் 1 தமிழக முதலமைச்சர் பிறந்த நாளினை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் :

மார்ச் 1 தமிழக முதலமைச்சர் பிறந்த நாளினை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் :
பிப்:28
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா



தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு அக்ராஹரம்  பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழக பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 1 தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பிறந்தநாளினை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் உதவிகள் வழங்குவது குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  திமுக வினர்  பொதுமக்களிடையே  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது,பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . ஒன்றிய அவைத்தலைவர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார் . வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் ,வடுகபட்டி பேரூர் செயலாளர் காசி விஸ்வநாதன் , கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் எஸ்பிடி .தமிழன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ,கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் ,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் குள்ளபுரம் முருகன்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரவணன், பாலசுப்பிரமணி ,ஈஸ்வரன் ,செல்வி அன்னபிரகாஷ் ,பாக்கியம் கண்ணன் , டி.வாடிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ,திமுக  கிளைச் செயலாளர் மகாராஜன் ,சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் ,கிளை நிர்வாகிகள் உதயசூரியன், ராம்ஜி, தினேஷ் ,ரஞ்சித் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post