எருமலைநாயக்கன் பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் களத்தில் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
பிப்:26
ஆவணம்:3
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி,பிப்.27- தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருமலைநாயக்கன் பட்டி ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் பொது கிணறு பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லாமல் முட்புதர்கள்,மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என இருந்து வந்துள்ளது .கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை பணியில் மேற்கொண்டு சீரமைத்து தரக்கோரி பல்வேறு முறை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் கடந்த ஜனவரி 26 எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுத் கிணற்றை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் சீரமைத்து தரக்கூடிய அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலர் ஆகியோரிடம் மனு அளித்ததாக கூறுகின்றனர் .பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மனு மீது இதுவரை எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் 1வது வார்டு பகுதியில் உள்ள பொதுக் கிணற்றை தூய்மை பணிகள் மேற்கொண்டு கிணற்று அருகில் கிடந்த தேவையற்ற பொருட்களை அங்கிருந்து எடுத்து கிணத்தை சுற்றி உள்ள தேவையற்ற முட்புதர் செடிகளை அப்புறப்படுத்தினர் .மேலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பொதுக் கிணற்றை ஊராட்சி நிர்வாகமே முன்வந்து தூய்மை பணி மேற்கொள்ளப்படாத நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தூய்மை பணி மேற்கொண்டது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு மற்றும் பாராட்டை பெற்றுள்ளது .இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த பெரியகுளம் தாலுகா செயலாளர் பிரேம்குமார்,துணைச் செயலாளர் பெருமாள் சாமி , எருமலை நாயக்கன்பட்டி கிளை நிர்வாகிகள் விக்னேஷ் ,மாதவன் ,சூர்யா, சிவராமன், பிரேம்குமார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் உடன் இருந்தனர் .