சேவை குறைபாட்டில் பெரியகுளம் கிளை ST கூரியர்........
பிப்:11
ஆவணம்:3
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ST கூரியர் சேவை குறைபாடு காரணமாக பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது தேவைக்காக எதிர்நோக்கி காத்திருக்கும், தபால்கள், பார்சல்களை குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்குவது இல்லை. மேலும் ST கூரியரில் தபால் மற்றும் பார்சல்கள் புக் செய்யும்போது பணியாளர்கள், பயனாளர்களின் முழு விலாச விபரங்களை பதிவு செய்வதில்லை, மாறாக பெயர், ஊர் மற்றும் Cell No மட்டும் பதிவு செய்கின்றனர். இதனால் முழு விலாசம் இல்லை எனக் கூறி சேவை செய்யாமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ST கூரியர் அலுவலகத்திற்கு வரும் தபால்களை, பார்சல்களை அலுவலக ஊழியர்கள் சரிபார்த்து இறக்குவதில்லை. இதன் காரணமாக உரியவரிடம் கிடைக்க வேண்டிய தபால்கள் வேறொரு ஊர் பகுதியில் உள்ள ST கூரியர் அலுவலகத்திற்கு சென்று தேக்க நிலை அடைந்து சில நாட்கள் கழித்து பயனாளர்களுக்கு கிடைத்து வருகின்றது. உதாரணமாக பெரியகுளத்தில் பட்டு வடா செய்யப்பட வேண்டிய தபால் சின்னமனூரில் உள்ள அலுவலகத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. இவை சம்மந்தமாக ST கூரியர் பெரியகுளம் கிளை அலுவலக ஊழியர்களிடம் கேட்டால் மிகுந்த அலட்சியப் போக்குடனும், அவ மரியாதையாகவும் பேசி வருகின்றனர். மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பயனாளர்களின் இல்லங்களுக்குச் சென்று தபால் மற்றும் பார்சல்கள் பட்டுவாடா செய்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏன் இப்படி சேவை குறைபாடு புரிகின்றீர்கள் என்று கேட்டால் ." வயித்த வலி என்றால், நீ வந்து தான் மருந்து வாங்கி சாப்பிட வேண்டும் என தெனாவட்டாக பதிலளித்து வருகின்றனர். வெறும் கமிஷன் ஆதாயத்திற்காகவும், உழைப்பில்லாமல் சம்பளம் பெற்று வரும் பெரியகுளம் கிளை ST கூரியர் நிறுவனம் மீது சேவை குறைபாடு காரணமாக நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு துரித சேவை கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் பயனாளர்களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.......