திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், எஸ்.தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட, நிலக்கோட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள், பிப்ரவரி - 14 அன்று தேசிய குடற்புழு நீக்க நாள்விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் சுகாதார பகுதி துணை இயக்குனர் மரு.மு.வரதராஜன்,எம்.பி.பி.எஸ்,டி.பி.ஹெச், சுகாதாரப்பணிகள் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், எஸ்.தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட, நிலக்கோட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள், பிப்ரவரி -  14 அன்று           *தேசிய குடற்புழு நீக்க நாள்* விழிப்புணர்வு  சைக்கிள் பேரணி  நடைபெற்றது.

மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வருடத்திற்கு,இரண்டு மாதங்கள் *அல்பெண்டசோல் மாத்திரைகள்* 1-வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ,மாணவிகளும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் ( கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்கள் தவிர ) கண்டிப்பாக  சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 
இரத்த சோகையை தடுக்கும் பொருட்டு திறந்த வெளியில் மலம் கழிப்பது கூடாது என்றும், சுற்றுப்புற தூய்மை பாதுகப்பது, சாப்பிடும் முன்னர் கைககளை சோப்பு போட்டு  கழுவுவது போன்றவைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நலக்கல்வி வழங்கப்பட்டு, உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.


இப்பேரணியில் தலைமை ஆசிரியர் திருமதி. கே.சீத்தாலட்சுமி, ஆசிரியர்கள் எம்.செந்தில்மணி, சி.ஆணந்த்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. வே.முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள், திரு. மணி, திரு.ஆண்டிவேல், திரு.வரதராஜன், திரு.வினோத்குமார், கிராம சுகாதார செவிலியர் திருமதி ஜெயலட்சுமி, திருமதி நவீணா ஆகியோர்கள் கலந்து கண்டனர்.
முன்னதாக திரு.மணி,சுகாதார ஆய்வாளர் இப்பேரணி நடைபெற ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Previous Post Next Post